En  |  සිං



காசோலை சரிபார்ப்பு(CITS)

இரண்டு தசாப்தங்களுக்கு முன்னதாக நிறுவப்பட்ட LankaPay ஆனது இலங்கையில் தானியங்கி தீர்வு மையத்தின் (ACH) வியாபகத்தில் முக்கிய பங்காற்றி வருகிறது. 2006 ஆம் ஆண்டு மே மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட அதன் புரட்சிகரமான முயற்சிகளில் ஒன்றான காசோலை சரிபார்ப்பு முறைமையானது (காசோலை பிம்பப்படுத்தல் மற்றும் சுற்றோட்டக் குறைப்பு- CITS), காசோலை செயலாக்கத்தைப் பெரிதும் நவீனப்படுத்தியுள்ளது. வங்கிகளுக்கிடையே டிஜிட்டல் காசோலை படங்களைப் பரிமாறுவதன் மூலம், CITS தேசிய சில்லறை கட்டண உள்கட்டமைப்பில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் காசோலை சரிபார்ப்பு செயற்பாட்டின் போதான பௌதீக நகர்வுகளினூடாக ஏற்படும் சிக்கல்கள் நீக்கப்பட்டுள்ளன. இந்த பட அடிப்படையிலான தீர்வுக்கு மாறும் செயற்படானது, தீர்வு காணும் செயல்முறையை ஒரு வேலை நாளுக்கு மட்டுப்படுத்தியது மட்டுமல்லாமல், வங்கிகளுக்கு வினைத்திறனையும் அதனோடான செலவுக் குறைப்பையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. மேலும், வணிகங்களுக்குக் காசோலைகளைச் சமர்ப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிப்பதன் மூலம், வாடிக்கையாளர்களுக்கு வங்கிகளுடனான ஒட்டு மொத்த அனுபவங்களை சௌகரியமாக்கியுள்ளது.

வணிகங்களுக்காக, நடைமுறைப்படுத்தப்பட்ட CITS ஆனது குறிப்பிடத்தக்க அளவிலான பல அனுகூலங்களை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. ஆன்லைன் தரவு சமர்ப்பிப்பு முறையானது வங்கிகளுக்குக் காசோலை படங்கள் மற்றும் MICR தரவுகளை வலுவான குறியாக்கத்துடன் மெய் நிகர் தனியார் வலையமைப்பின் (VPN) மூலம் பாதுகாப்பாகச் சமர்ப்பிக்க வழிவகுக்கின்றது. இது தரவுகளின் முழுமையும் இரகசியத்தன்மையும் உறுதிசெய்கின்றது. மேலும், வரையளவுபடுத்தப்பட்ட காசோலை முன்வடிவங்களின் அறிமுகம், காசோலை வெளியீட்டுடன் தொடர்புடைய மோசடி அபாயங்களைக் குறைக்க உதவியுள்ளதுடன் வணிகங்களுக்கு அதிக பாதுகாப்பையும் நிதி பரிவர்த்தனைகளின் போதான மனவமைதியையும் உறுதி செய்கிறது.

மொத்தத்தில், LankaPay இன் புத்தாக்கம் மிக்க முயற்சிகள் கட்டண முறைமைகளை நவீனமாக்கியுள்ளதுடன், வணிகங்களுக்கு வினைத்திறன் மிக்க, பாதுகாப்பான மற்றும் வரையளவுபடுத்தப்பட்ட காசோலை செயலாக்கத் தீர்வுகளை வழங்குவதன் மூலம் அவர்களை பலப்படுத்தியுள்ளது.

வணிகங்களுக்கான அனுகூலங்களை கண்டறியுங்கள்

  • இலங்கையில் உள்ள 2,500 க்கும் மேற்பட்ட வங்கி கிளைகள் வேகமான காசோலை தீர்வுக்கு வலுவான உள்கட்டமைப்பை உறுதிசெய்கின்றன.
  • உரிய நேரத்தில் நிதி கிடைக்கப் பெறுவதனால், வணிகங்களினால் தமது செயல்பாட்டு தேவைகளை திறம்பட பூர்த்தி செய்ய முடியும்.
  • மாற்றங்களின் போது காசோலைகள் தொலைவதற்கான சாத்தியக்கூறுகள் நீக்கப்படுதலானது வணிகங்களுக்கு அவர்களின் நிதியியல் பரிவர்த்தனைகளில் அதிக நம்பிக்கையை வழங்குகிறது. 
  • காசோலையின் நிலையை அடுத்த வேலை நாளுக்குள் தெரிந்து கொள்ள முடிவதால், வணிகங்களுக்கு அவர்களின் நிதி நடவடிக்கைகளில் நிலைப்பாட்டை உறுதிப்படுத்த முடியும்.
  • நீட்டிக்கப்பட்ட வங்கி காலவரையறைகள் மற்றும் மதிப்புக் கூட்டப்பட்ட சேவைகள் ஆகியவை வணிகங்களுக்கு கிடைக்கப்பெறும் வசதியையும் அணுகுமுறையையும் மேம்படுத்துகின்றன. 
  • வேகமான மற்றும் பாதுகாப்பான காசோலை பரிவர்த்தனைகள் நிதி செயல்பாடுகளை நேர்த்தியாக்குவதுடன் வினைத்திறனை மேம்படுத்த உதவுகின்றன. 
  • வங்கியியல் முறைமையில் மேம்படுத்தப்பட்ட வினைத்திறன் வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்தி, வணிகங்களுக்கான வலுப்படுத்தப்பட்ட திரவநிலையை உருவாக்குகிறது.

ஒரு காசோலையை எவ்வாறு வரைய வேண்டும்?

நீங்கள் செய்யவேண்டியவை

  • திகதி, இலக்கங்களிலும் எழுத்துக்களிலும் எழுதப்பட்டத் தொகை, பெறுநரின் பெயர் மற்றும் தேவையான கையொப்பம் /கையொப்பங்கள் என அனைத்து முக்கியமான தகவல்களையும் உள்ளடக்கிய காசோலையினை வரையுங்கள்.
  • காசோலையினை எழுத கருமையான மையினை பயன்படுத்துங்கள். 
  • காசோலையினை அச்சிடத் தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் குறைந்தபட்சம் 12 ஆண்டுகள் வரை எழுத்துக்கள் நீடிக்குமாறு அச்சிடுங்கள். 
  • திருத்தங்களுடன் கூடிய காசோலைகளை வெளியிடுவதை தவிர்த்துக்கொள்ளுங்கள்.
  • காசோலையில் காணப்படும் எந்தவொரு தகவலையும் சுற்றி வட்டமிடுதலையோ அல்லது அடிக்கோடு வரைவதையோ தவிர்த்துக்கொள்ளுங்கள். 
  • காசோலையில் காந்த மையினால் குறியாக்கப்பட்ட எழுத்துக்கள் சேதமடையும் வகையில் காசோலைகள் மடிக்கப்படுவதையோ கசக்கப்படுவதையோ தவிர்த்துக் கொள்ளுங்கள்.
  • காந்த மையினால் குறியாக்கப்பட்ட எழுத்துக்களை சேதப்படுத்தும் வகையில் எழுதுதல் மற்றும் குறியீடுகளை இடுதல் போன்றவற்றைத் தவிர்த்துக்கொள்ளுங்கள்.
  • காசோலையின் முகப்பில் உள்ள உள்ளடக்கத்தை மாற்றவோ அழிக்கவோ செய்யாதீர்கள்.

காசோலைகளை அவமதித்தல்

காசோலைகள் எழுதப்பட்டவரின் வங்கிக்கு பௌதீகமாக முன்வைக்கப்படுவதில்லை. எனவே, காசோலையின் மீது திருப்பி அனுப்பப்படுவதற்கான குறிப்புரை எழுதப்படுவதற்கான சாத்தியமில்லை. ஏதேனும் காரணத்தினால் காசோலை செலுத்தப்படாவிட்டால், பணம் செலுத்தும் வங்கி காசோலை திருப்பி அனுப்புவதற்கான பொருத்தமான குறியீட்டை தேர்ந்தெடுத்து செயல்படுத்த வேண்டும். மேலும் வாடிக்கையாளருக்கு மறுக்கப்பட்ட காசோலை அறிவைப்பையும் (CRN) வழங்க வேண்டும்.

CITS உடன் இணைந்து செயலாற்றும் நிதி நிறுவனங்கள்

வழமையான கேள்வி & பதில்கள்

காசோலைகள், காசோலை தீர்வு மையத்தின் செயல்பாடுகளை மேற்கொள்ளும் LankaPay இற்கு சென்ற பின் ஒரு வேலை நாளில் பொதுவாக தீர்வாகும்.

ஆம், பிந்தைய தேதியிட்ட காசோலைகளை டெபாசிட் செய்யலாம். இருப்பினும், காசோலையில் எழுதப்பட்ட தேதி அல்லது அதற்குப் பிறகு மட்டுமே காசோலை செயலாக்கப்படும்.

வங்கிகள் காசோலை தீர்வுக்கு தரகு கட்டணங்கள் மற்றும் பிற செயலாக்க அறவீடுகள் போன்ற கட்டணங்களை வசூலிக்கலாம். இந்த கட்டணங்கள் வங்கிகளுக்கு வங்கி மாறுபடலாம்.

ஒரு காசோலையில் அதை எழுதியவர் (வரைபவர்), எந்த வங்கியில் வரையறுக்கப்பட்டுள்ளது (வரையும் வங்கி), யாருக்காக (பெறுநர்), தொகை, திகதி மற்றும் கையொப்பம் போன்ற அம்சங்கள் அடிப்படையானதாகும்.

ஆம், இலங்கையில் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் எழுதப்பட்ட காசோலைகள் செல்லுபடியாகும்.

உங்கள் காசோலை தொலைந்தால் அல்லது திருடப்பட்டால், அதை வெளியிட்ட வங்கிக்கு உடனடியாக அறிவிக்கவும். அவர்களால் அனுமதியில்லாத பயன்பாட்டைத் தவிர்க்கவும் காசோலையிலிருந்து பணம் செலுத்தப்படுவதை நிறுத்தவும் முடியும்.

'Pay' வரியில் பெறுநரின் முழு பெயரை எழுதவும். காசோலை எழுதப்படுவது அந்த நபருக்கே என்றால், 'Bearer' என்ற வார்த்தையின் மேல் கிறுக்கி, மேல் இடது மூலையில் இரட்டை கோடு வரையவும்.

ஆம், காசோலை இன்னும் தீர்வுக்காக வழங்கப்படவில்லை என்றால், நீங்கள் பணம் செலுத்துவதை நிறுத்த கோரலாம்.

உங்கள் வங்கியிடம் உத்தியோகபூர்வ கோரிக்கை ஒன்றினை முன்வைத்தலின் மூலம் காசோலையின் சான்று படத்தைப் பெறலாம்.

இல்லை, ரூ.100 கோடிக்கு மேல் காசோலைகளை அரசு துறைசார் நிறுவனங்களுக்கு மட்டுமே வரைய முடியும்.

இலங்கையில் மின்னணு காசோலை சமர்ப்பிப்பை கட்டுப்படுத்துவதற்கான சட்டமாக 2005 ஆம் ஆண்டின் கட்டண மற்றும் தீர்வு முறைமைகள் சட்டம் எண் 28 திகழ்ந்து வருகின்றது.

ஆம், திரும்பிய காசோலைகள், போலி காசோலைகள் அல்லது தொலைந்த/திருடப்பட்ட காசோலைகள் போன்றவை சமர்ப்பிக்கப்படுவதற்கான சில அபாயங்கள் காணப்படுகின்றன.

பணம் அல்லது மின்னணு கட்டணங்களுக்குப் பதிலாக, காசோலை என்பது ஒரு வங்கி கணக்கிலிருந்து மற்றொரு வங்கி கணக்கிற்கு பணம் செலுத்துவதற்காக சமர்ப்பிக்கப்படும் எழுதபட்ட வாக்குறுதியாகும்.

காசோலைகள் பொதுவாக அவை வெளியிடப்பட்ட தேதியிலிருந்து ஆறு மாதங்களுக்கு செல்லுபடியாகும்.

தீர்வு முறைமைகள் மின்னணு படங்களைப் பயன்படுத்துகின்றன, எனவே நீங்கள் வழங்கும் வங்கிக்கு காசோலையை கையளித்த பிறகு அது பௌதீக காசோலை தீர்வு செயல்முறையிலிருந்து நீக்கப்படுகிறது.

ஆம், ஒரு காசோலையின் சான்றளிக்கப்பட்ட படம் நீதிமன்றத்தில் ஏற்கப்படும்.

வியாபாரத்திற்கான தொடர்புடைய தயாரிப்புகள்







புதிய தகவல்களை பெற எம்மை சப்ஸ்க்ரைப் செய்யுங்கள்

சமீபத்திய தகவல்கள், விதிமுறைகள் மற்றும் சேவைகள் தொடர்பான LankaPay இன் செய்திமடலை நேரடியாக பெற்றுக்கொள்ள இப்போதே பதிவு செய்யுங்கள்

0

Event Calander